000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a காலாரி (காலசம்ஹாரமூர்த்தி) |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a அட்ட வீரட்டர்களில் ஒருவராக மார்க்கண்டேயனுக்காக காலனை வதைத்த காலசம்ஹாரமூர்த்தி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சிவபெருமானை நாள்தோறும் பூஜிக்கும் 16 வயதான இளஞ்சிறான் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை காலால் எட்டி உதைத்து காலன் மேல் வலது காலை வைத்து மிதித்து, இடதுகாலை உயர்த்தி தூக்கி உதைக்கும் நிலையில் வைத்தவாறு அவனை எச்சரிக்கும் நிலையில் அட்டவீரட்டர்களில் ஒருவரான காலாந்தகமூர்த்தி நான்கு திருக்கைகள் பெற்றுள்ளார். எமனை எச்சரிக்கும் இடது முன்கை, வியப்பு முத்திரைக் காட்டும் இடது பின் கை, பின் வலது கை சூலத்தை ஏந்தியவாறும், முன் வலது கை குறுவாளை ஓங்கியபடியும் இறைவன் கோபக்கனலாக உள்ளார். அவரின் காலடியில் காலன் வீழ்ந்துள்ளான். காலாரிக்கு அலங்கரிக்கப்பட்ட ஜடாபந்தம் எழில் சேர்க்கிறது. நீள்காதுகளில் இடதுகாது முன்கழுத்தில் வீழ்ந்துள்ளது. கழுத்தில் ஆபரணங்கள் காட்டப்பட்டுள்ளன. கால்களில் வீரக்கழல் அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. இடது தோளின் வழியே முப்புரிநூல் செல்கிறது. அரையாடை அணிந்துள்ள இறையனார் உருட்டிய விழிகளுடன் கோபக்கனலில் உள்ளவாறு காட்டப்பட்டுள்ளார். இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தை யானை தாங்குகிறது. இச்சிற்பத்தின் மேலே காட்டப்பட்டுள்ள சிறிய புடைப்புச் சிற்பம் ஓடும் காலனை எட்டுக்கைகளுடன் துரத்திச் செல்லும் சிவனாரின் சிற்பமாகும். |
653 | : | _ _ |a காலாரி, காலாந்தகமூர்த்தி, காலசம்ஹாரமூர்த்தி, மார்க்கபந்து, மார்க்கண்டேயன், அட்டவீரட்டானர், இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a முக்தேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.82824139 |
915 | : | _ _ |a 79.70781952 |
995 | : | _ _ |a TVA_SCL_000018 |
barcode | : | TVA_SCL_000018 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |